பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன உள்ளிட்ட விகாரைகளில் விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

இதற்காக நாடளாவிய ரீதியாகவும் இருந்து பௌத்தர்கள் குறித்த விகாரைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியாகவுள்ள சுமார் 11 ஆயிரம் விகாரைகளில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களில் தானசாலைகளும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் 700 இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொசன் பொளர்ணமி தினம் நடைபெறும் மிஹிந்தலை, ஸ்ரீ மகாபோதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன ஆகிய விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...