பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  இரண்டு நாட்களுக்கு சிறைக்கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்பு பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி பார்வையாளர்கள் வர வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...