மேல் மாகாணத்தில் அதிகரித்த டெங்கு நோய்

Date:

இலங்கையில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் மாத்திரம் 9,675 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு நோயினால் இவ்வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழையுடன் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், வீடுகளைச் சுற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...