மேல் மாகாணத்தில் அதிகரித்த டெங்கு நோய்

Date:

இலங்கையில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் மாத்திரம் 9,675 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு நோயினால் இவ்வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழையுடன் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், வீடுகளைச் சுற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...