வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்: பொலிஸ் மா அதிபர்

Date:

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினரை ஒடுக்குவதற்கு அவர்களிடமுள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக உள்ளமையினால் முப்படையினரின் ஆதரவுடன், அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை கைப்பற்றுமாறும்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யுக்திய நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் யுக்திய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...