விவசாயத் துறை மேம்பாட்டிற்காக இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் ஓமான் தூதுவருக்கும் இடையில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மதிப்பீடு செய்து இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவார் என ஓமான் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...