68 வயதான அக்கரைப்பற்று ஹாஜி மாரடைப்பால் மக்காவில் மரணம்!

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் அவர்கள் (68) மாரடைப்பு காரணமாக மக்காவில் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இவர் முஸ்லிம் மத்திய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று-6ஐ சேர்ந்தவராவர்.

அவரது ஜனாஸா புனித மக்காவின் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் உள்ளது.

அரஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது.

ஹஜ் கமிட்டி, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம், ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ஹாதீ  டிராவல்ஸ் நிறுவனம் புனித மக்கா நகரில் ஜனாஸாவை அடக்கம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...