ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறை பார்த்தல் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம் மத்ரஸா, அப்துல் மஜித் எகடமி, அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா, தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா மாணவர்கள், உஸ்தாத்மார்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரை பிறைப்பார்த்து வந்த குழுக்களுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கொழும்பு பெரிய பள்ளிவாசல்  பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...