கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

Date:

2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் (G.C.E A/L) அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

மேற்படி ஆட்சேர்ப்புக்குரியதான பாடநெறிகளுக்கான தகைமைகளைப் பரிசோதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதானது தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கான தகைமையல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...