கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

Date:

2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் (G.C.E A/L) அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

மேற்படி ஆட்சேர்ப்புக்குரியதான பாடநெறிகளுக்கான தகைமைகளைப் பரிசோதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதானது தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கான தகைமையல்ல என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...