குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: குவைத் அரசு அறிவிப்பு

Date:

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலும் இந்தியர்களும் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் என பலியானார்கள்.

பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கும் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் தீ விபத்தில் பலியானவர்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

 

பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12.50 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது.

மேலும் குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...