சீரற்ற வானிலையால் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

Date:

 

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டு 212 ரக உலங்கு வானூர்திகளும், பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்றும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...