துருக்கியிலிருந்து காசாவுக்கு அனுப்பப்பட்ட 20, 848 தேன் பீப்பாக்கள்!

Date:

துருக்கியின் தென்மேற்கு மாகாணமான முக்லாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில் இயற்கையான முறையில் உற்பத்திசெய்த 20,848 தொன் தேனை நேற்றுமுன்தினம் காசா மக்களுக்காக அனுப்பியுள்ளனர்.

முக்லா மாகாண தேனீ வளர்ப்போர் சங்கம் ((MAYBIR) தலைமையிலான ஒரு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தேன் பீப்பாக்கள் இஸ்ரேலிய அடக்குமுறையின் கீழ் வாழும் பலஸ்தீனியர்களுக்காக துருக்கி செம்பிறைச்சங்கம் மூலம்  மெர்சின் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன்போது முக்லா மாகாண ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் குறிப்பிடுகையில்,

தற்போது நடந்து வரும் இனப்படுகொலையில் முக்லா மாகாணத்தின் தேனீ வளர்ப்பவர்கள் சங்கம் அலட்சியமாக இல்லை, உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக துருக்கி மாறியுள்ளது. மனிதாபிமான துயரங்களுக்கு மத்தியில் காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துருக்கியின் ஆதரவையும் ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

துருக்கி, துருக்கிய செஞ்சிலுவை, செம்பிறைச்சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மனிதாபிமான உதவி பொருட்களை துருக்கி காசாவுக்கு அனுப்பியுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...