மஹிந்தானந்த- குணதிலக்க எம்.பிக்களுக்கிடையில் மோதல்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ஷவுக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது காலில் நேற்று செவ்வாய்க்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதலில் காயமடைந்த குணதிலக்க ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துள்ளதாக, குணதிலக்க ராஜபக்ச எம்.பியின் மகன் நிலுபுல் ராஜபக்ச கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் தனது தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில், தான் அவரை தாக்கவில்லை என மறுத்துள்ளார்.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...