மேன்முறையீடு செய்ய தயாராகும் ஹிருணிகா!

Date:

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய ஆலோசனைகளை நடத்த தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...