ரோயல் பார்க் கொலைச் சம்பவம்: பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது!

Date:

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாமைக்காக ரோயல்பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட இரண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்புகளை நீக்குமாறு மூன்றுநீதிபதிகள் அடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன மேற்படி பிரதிவாதிக்கு பொதுமன்னிப்பை வழங்கியவேளை மனுதாரரின் அடிப்படை உரிமைகளையும் பொதுநம்பிக்கை கோட்பாட்டையும் மீறியுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டு அமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.

ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...