விவசாயத் துறை மேம்பாட்டிற்காக இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் ஓமான் தூதுவருக்கும் இடையில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மதிப்பீடு செய்து இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவார் என ஓமான் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...