வை.எம்.எம்.ஏ தேசிய பேரவையின் வருடாந்த மாநாடு சனிக்கிழமை!

Date:

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் பி.ப. 2.00 மணிக்கு தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்பு டகுத் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் திறமைகளைக் காட்டிய கிளைச் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்குதல், தேசிய மாவட்டத்தில் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருது வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியச் செயலாளர் ஆசிப் சுக்ரி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...