வை.எம்.எம்.ஏ தேசிய பேரவையின் வருடாந்த மாநாடு சனிக்கிழமை!

Date:

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் பி.ப. 2.00 மணிக்கு தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்பு டகுத் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் திறமைகளைக் காட்டிய கிளைச் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்குதல், தேசிய மாவட்டத்தில் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருது வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியச் செயலாளர் ஆசிப் சுக்ரி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத்...

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு...