அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Date:

அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது 55 வயதுடைய பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரும் 38 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ள நிலையில், பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில்,

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” என்பவர் எனக்கு 16 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து எனது பச்சைகுத்தும் நிலையத்தின் திறப்பு விழாவிற்குப் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்தவை அழைக்குமாறு கூறினார்.

பின்னர், “லொக்கு பெடி” கூறியபடி எனது பச்சைகுத்தும் நிலையத்தின் திறப்பு விழாவிற்குப் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்தவை அழைத்திருந்தேன்.

ஆனால் இந்த கொலை திட்டம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் இந்த கொலை சம்பவத்துக்காகத் துப்பாக்கித் தாரிகளுக்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் தலைமறைவாக உள்ள  பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” மற்றும் “கோனா கோவிலே ஷாந்த ” ஆகியவர்களின் தலைமையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...