‘இதுவரை பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை கண்டதில்லை’: வீடியோ எடுத்த மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் சந்தேகத்திற்குரிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரது  கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாணவர் பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிப்பவர் என்றும் அதே வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் டுபாய் தூதரகத்திற்கு வந்ததாகவும், இதற்கு முன்னர் பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை காணவில்லை எனவும், எனவே தான் இந்த வீடியோவை எடுத்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...