இஸ்ரேல் நோக்கிச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தக்கூடாது: பிரிட்டன் எம்.பிக்கள் கோரிக்கை

Date:

இஸ்ரேலுக்கு 300,000 பீப்பாய்கள் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியுறவுச் செயலர் டேவிட் லாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நேரப்படி இன்று புதன்கிழமை கப்பல், ஜிப்ரால்டரை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெட் எரிபொருள் இறக்கப்பட்டு, காசா மக்கள் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேலிய விமானப்படையின் F16 மற்றும் F35 எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை 39, 000 பேரைக் கொன்ற காஸா மீதான போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பிரிட்டன் மீளாய்வு செய்து வருகிறது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...