ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்துக்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை சட்டங்கள் நாகரிக சமூகத்தை அழிக்கின்றது என்ற வகையில் ஜனாதிபதி இச்சட்டவாக்கத்தை அமுல்படுத்தக்கூடாது என்றும் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.