கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வோருக்கு விசேட அறிவித்தல்!

Date:

இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையான மக்கள் இன்று (19) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குப் பிரவேசித்திருந்தால், அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்துக்குச் சென்று திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக் கொண்டு, அதன் சேவையைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...