கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வோருக்கு விசேட அறிவித்தல்!

Date:

இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையான மக்கள் இன்று (19) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குப் பிரவேசித்திருந்தால், அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்துக்குச் சென்று திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக் கொண்டு, அதன் சேவையைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...