காசா போரில் தலையிட வாய்ப்பு; பலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்குள் நுழைவோம் :துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

Date:

தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும்.

கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2020 இல் ஐ.நா. அங்கீகரித்த அரசுக்கு ஆதரவாக துருக்கி படை லிபியாவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கர்பக்கில் துருக்கி இராணுவ பயிற்சிகளை வழங்கியது தொடர்பிலேயே அர்தூகான் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்பதாகவும், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் சுமார் 10 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகவும் துருக்கி ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் துருக்கியப் படைகள் காஸாவுக்குள் இறங்கினால்,  பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இப்போது செய்வதை இனி அவர்களால் செய்ய முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...