ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டால், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் அல்லது 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...