தணிக்கை சபை உறுப்பினராக அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் நியமனம்

Date:

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக ‘மாத்ய கீர்த்தி’ அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினராக இருந்து பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவராவார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சு, துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சு முதலான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மள்வானையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஹில்மி மத்திச்சம், அஸ்மா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் மல்வானை அல் முபாரக் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

லண்டன், மலேசியா, இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு முதலான நாடுகளில் ஊடகத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...