தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் திடீா் அறிவிப்பு: பின்னணியில் என்ன நடந்தது?

Date:

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன், திடீரென்று தனது முடிவை மாற்றி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஜோ பைடன் விலகியதற்கு கட்சியினர் கொடுத்த கடுமையான அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ஜோ பைடனின் இந்த திடீர் அறிவிப்பு ஜனநாயக கட்சியினருக்கே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஜோ பைடன் சனிக்கிழமை இரவு வரை அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவது இல்லை என விடாப்பிடியாய் கூறி வந்து இருக்கிறார்.

ஆனால், ஒரே நாளில் தனது முடிவை தலைகீழாக மாற்றிய பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசையும் முன்மொழிந்து இருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திடீரென விலகியிருப்பதால் மீண்டும் ஜனநாயக கட்சியினர் கூடி புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பெரும்பாலும் கமலா ஹாரிஸுகே இதில் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது போக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கூறினர்.

இதனால், அடுத்தடுத்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது டெலாவர் இல்லத்தில் தனிமையில் ஓய்வு எடுத்து வந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...