பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் கரிசணை!

Date:

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் பாரியளவில் வியாபித்துள்ளதால்,அமைதியைக் கொண்டுவருவதற்கு உரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் உயிர்களையும் அரசாங்க உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இணைய மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகொங்கில் பல்கலைகழகங்களில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரி, பங்களாதேஷிற்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...