பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ்: கொவிட் விதிமுறைகளை மீள பேணுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

Date:

நாட்டில்  இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதால் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளவர்கள்  போன்றவர்கள் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

“சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் முகக் கவசங்களை அணிய வேண்டும், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில் இடைவெளியை பேண வேண்டும்.

பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்  உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களைப் பாடசாலைகள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை மற்றும் தொண்டை வலி ஆகியவை இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளாகும் என்றார்.

நாட்டில் இன்ஃப்ளூன்ஸா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  ஊடகப் பேச்சாளர்  வைத்தியர் சம்மில் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ஒரு சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில்  பெரும்பாலானவர்கள் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள். சில உயிரழப்புகளுக்கு நேரடியாக கொவிட் தொற்று காரணமாக இருக்கவில்லை. ஆனால் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...