பாடசாலைகள், மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!

Date:

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாடசாலைக் காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படும் விதத்தில் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...