புகையிரத நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

922 புகையிரத நிலைய அதிபர்களின் தொழில்சார் பிரச்சினைகளான பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு போன்றவற்றுக்கு அமைச்சரவை தீர்வு காணாவிட்டால் நாளை முதல் மீண்டும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தமது 13 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் தீர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் சுமேத நவரத்ன தெரிவித்திருந்தார்

இந்நிலையில் அந்த அறிக்கைக்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன,

புகையிரத ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு செய்தால், சேவையை கைவிட்டது போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரதத்துறை தொடர்பான பிரச்சினை இருப்பின் கலந்துரையாடல் மூலம் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மக்களை ஒடுக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், இலங்கையின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...