போதைப்பொருள் காரணமாக வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழக்கின்றனர்!

Date:

போதைப்பொருள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இன்னமும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷக்ய நாணயக்கார,  தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்று உடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் போது, போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்றும் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளை 1927 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...