ஹூதிகளின் பதிலடியால் செயலிழந்த இஸ்ரேலின் ஈலாட் துறைமுகம்

Date:

இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரத்திலுள்ள ஈலாட் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க முடியதளவுக்கு போக்குவரத்து இடைஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதனால் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அந்த துறைமுகத்தினுடைய தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.

“ஹூதி செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கியதில் இருந்து எய்லாட் துறைமுகம் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா மோதல் வெடிப்பதற்கு முன், இந்த துறைமுகம் கார்களுக்கான இஸ்ரேலின் முக்கிய நுழைவுப் புள்ளியாக இருந்தது.

இதேவேளை யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரமான ஈலாட்டை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்ததாகக் கூறுகின்றனர்.

யெமனில் இருந்து ஏவுகணையை அதன் எல்லைக்குள் கடக்கும் முன் அதன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று யெமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக  இத் தாக்குதல் நடைபெற்ற‌து.

குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...