அரச தாதியர்கள் சீருடை தொடர்பில் முறைப்பாடு: கபே அமைப்பு விசேட அறிவிப்பு!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (28) நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையுடன் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் வகையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, பொதுமக்களின் வரிப் பணத்தினால் வழங்கப்படும் சீருடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நிறுவனங்களின் சட்டவிதிகளையும் தேர்தல் சட்டத்தையும் மீறும் செயலாகும் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...