‘இதுவரை பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை கண்டதில்லை’: வீடியோ எடுத்த மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் சந்தேகத்திற்குரிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரது  கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாணவர் பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிப்பவர் என்றும் அதே வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் டுபாய் தூதரகத்திற்கு வந்ததாகவும், இதற்கு முன்னர் பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை காணவில்லை எனவும், எனவே தான் இந்த வீடியோவை எடுத்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...