‘இதுவரை பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை கண்டதில்லை’: வீடியோ எடுத்த மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் சந்தேகத்திற்குரிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரது  கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாணவர் பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிப்பவர் என்றும் அதே வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் டுபாய் தூதரகத்திற்கு வந்ததாகவும், இதற்கு முன்னர் பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை காணவில்லை எனவும், எனவே தான் இந்த வீடியோவை எடுத்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...