இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு!

Date:

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு சந்திப்பு நேற்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்தியன் முஸ்லிம் லீக்கின் பிராந்தியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் (MLA), தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் ஜனாப் எம். கே. சாஹுல் ஹமீது,
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப், எஸ். ஏ. முஹம்மத் மக்கி தமிழ்நாடு திருநெல்வேலி “அலி சன்ஸ் “நிறுவன தலைவர், ஜனாப் எம். நெய்னார் முஹம்மத் கடாபி ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றைய தினம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர் கல்முனையில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாகவும்
பேசியிருந்தனர்.

பரஸ்பர புரிதலுடனான இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான கலை கலாச்சாரம் இலக்கியம் பற்றிப் பேசப்பட்டதுடன் மாநாட்டுக் குழுவினரை இந்தியாவிற்கு வருகைத் தருமாறும் அதிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிதிகளின் அழைப்பையேற்று விரைவில் மாநாட்டு குழு இந்தியா செல்லவிருப்பதாக மாநாட்டுக் குழுத் தலைவர் கலாநிதி ஏ. எல் அன்சார் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்
இந்திய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.

அத்தோடு இந்நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் அன்சார் அவர்களால் சிரேஸ்ட ஊடகவியலாளர் கல்முனை ஜெஸ்மின் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவராகத் தெரிவாவதற்கு அரும்பாடுபட்ட  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர இணைச்செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகிய இருவரையும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...