இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு!

Date:

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு சந்திப்பு நேற்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்தியன் முஸ்லிம் லீக்கின் பிராந்தியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் (MLA), தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் ஜனாப் எம். கே. சாஹுல் ஹமீது,
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப், எஸ். ஏ. முஹம்மத் மக்கி தமிழ்நாடு திருநெல்வேலி “அலி சன்ஸ் “நிறுவன தலைவர், ஜனாப் எம். நெய்னார் முஹம்மத் கடாபி ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றைய தினம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர் கல்முனையில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாகவும்
பேசியிருந்தனர்.

பரஸ்பர புரிதலுடனான இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான கலை கலாச்சாரம் இலக்கியம் பற்றிப் பேசப்பட்டதுடன் மாநாட்டுக் குழுவினரை இந்தியாவிற்கு வருகைத் தருமாறும் அதிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிதிகளின் அழைப்பையேற்று விரைவில் மாநாட்டு குழு இந்தியா செல்லவிருப்பதாக மாநாட்டுக் குழுத் தலைவர் கலாநிதி ஏ. எல் அன்சார் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்
இந்திய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.

அத்தோடு இந்நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் அன்சார் அவர்களால் சிரேஸ்ட ஊடகவியலாளர் கல்முனை ஜெஸ்மின் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவராகத் தெரிவாவதற்கு அரும்பாடுபட்ட  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர இணைச்செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகிய இருவரையும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...