இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உபகுழுவின் அமைச்சரவையின் கட்டளைகளுக்கு இணங்க பொருத்தமான யாப்பு உருவாக்கப்படும்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்க மேற்படி குழு ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...