இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உபகுழுவின் அமைச்சரவையின் கட்டளைகளுக்கு இணங்க பொருத்தமான யாப்பு உருவாக்கப்படும்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்க மேற்படி குழு ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...