இஸ்ரேல் நோக்கிச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தக்கூடாது: பிரிட்டன் எம்.பிக்கள் கோரிக்கை

Date:

இஸ்ரேலுக்கு 300,000 பீப்பாய்கள் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியுறவுச் செயலர் டேவிட் லாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நேரப்படி இன்று புதன்கிழமை கப்பல், ஜிப்ரால்டரை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெட் எரிபொருள் இறக்கப்பட்டு, காசா மக்கள் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேலிய விமானப்படையின் F16 மற்றும் F35 எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை 39, 000 பேரைக் கொன்ற காஸா மீதான போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பிரிட்டன் மீளாய்வு செய்து வருகிறது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...