இஸ்ரேல் நோக்கிச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தக்கூடாது: பிரிட்டன் எம்.பிக்கள் கோரிக்கை

Date:

இஸ்ரேலுக்கு 300,000 பீப்பாய்கள் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியுறவுச் செயலர் டேவிட் லாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நேரப்படி இன்று புதன்கிழமை கப்பல், ஜிப்ரால்டரை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெட் எரிபொருள் இறக்கப்பட்டு, காசா மக்கள் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேலிய விமானப்படையின் F16 மற்றும் F35 எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை 39, 000 பேரைக் கொன்ற காஸா மீதான போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பிரிட்டன் மீளாய்வு செய்து வருகிறது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...