காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!

Date:

பலஸ்தீன நகரமான காசாவின்  பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டுள்ளதுடன், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னதாக மற்றொரு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...