காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!

Date:

பலஸ்தீன நகரமான காசாவின்  பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டுள்ளதுடன், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னதாக மற்றொரு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...