காசா போரில் தலையிட வாய்ப்பு; பலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்குள் நுழைவோம் :துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

Date:

தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும்.

கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2020 இல் ஐ.நா. அங்கீகரித்த அரசுக்கு ஆதரவாக துருக்கி படை லிபியாவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கர்பக்கில் துருக்கி இராணுவ பயிற்சிகளை வழங்கியது தொடர்பிலேயே அர்தூகான் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்பதாகவும், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் சுமார் 10 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகவும் துருக்கி ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் துருக்கியப் படைகள் காஸாவுக்குள் இறங்கினால்,  பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இப்போது செய்வதை இனி அவர்களால் செய்ய முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...