குடிபோதையில் ரயிலை இயக்கிய ஓட்டுநர்: ரயில்வே திணைக்களம் சட்ட நடவடிக்கை !

Date:

 ஜூன் 30ஆம் திகதி கொழும்பில் இருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட புகையிரதத்தின் சாரதியின் முறைகேடு தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்கள மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த ரயில் சாரதி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் புகையிரதம் பயணத்தை ஆரம்பித்த வேளை இயந்திர சாரதி அதிக போதையில் இருந்ததாகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதி கண்டிக்கு அருகிலுள்ள சுதும்பொல பகுதியில் ரயிலை நிறுத்தி விட்டு செல்ல முற்பட்ட போது பயணிகள் அவரை துரத்திச் சென்று மீண்டும் ரயிலில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

உதவி இயந்திர சாரதி பின்னர் கண்டி ரயில் நிலையம் வரை ரயிலை இயக்கியதாகவும் போதையில் இருந்த என்ஜின் ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதையில் இருந்த இயந்திர சாரதியின் நடவடிக்கையால் கண்டி ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.40க்கு வரவிருந்த புகையிரதம் 2.30 மணியளவிலேயே சென்றடைந்துள்ளது.

இது குறித்த முறைப்பாட்டின் அடிப்படியில் ரயில் திணைக்களம் சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...