ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டால், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் அல்லது 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...