ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரச அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் நிலையமொன்றினை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று இன்று அரச அச்சகத்திற்கு சென்று பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள (Department of Government Printing)  பிரதானி கங்கானி கல்பனா லியனகே (Gangani Kalpana Liyanage) மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...