தணிக்கை சபை உறுப்பினராக அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் நியமனம்

Date:

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக ‘மாத்ய கீர்த்தி’ அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினராக இருந்து பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவராவார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சு, துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சு முதலான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மள்வானையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஹில்மி மத்திச்சம், அஸ்மா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் மல்வானை அல் முபாரக் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

லண்டன், மலேசியா, இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு முதலான நாடுகளில் ஊடகத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...