பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக 500 பேருந்து சேவைகள் ஆரம்பம்!

Date:

மாணவர்களுக்காக, புதிதாக 500 பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியிலிருந்து 202 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர் சேவைக்காக அதிகளவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிசு சரிய பேருந்து சேவையின் கீழ் தற்போது 1537 பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.

மேலும் சுமார் 100,000 பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே 1990 சுவா சரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு 95 ஆம்புலன்ஸ்களை இலவசமாக மானியமாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் அனுமதியளித்துள்ளன.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...