பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.
அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு அமுல்ப்படுத்தப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.
இந்த விலைக் குறைப்பானது 450 கிராம் பாண்களுக்கு மட்டுமே என்றும் ஏனைய பேக்கரி தயாரிப்புகளுக்கு எந்த விலைக்குறைப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.