போதைப்பொருள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இன்னமும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷக்ய நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்று உடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன் போது, போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்றும் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளை 1927 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.