விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, ‘தவறு இல்லாத விவாகரத்து‘ என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
”தவறு இல்லாத விவாகரத்து‘ தொடர்பான வரைவு மசோதா ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்குகளில் நீண்ட கால விசாரணைகள் இன்றி, திருமணம் முறிந்துவிட்டதாக நிரூபணமானால் தீர்ப்பு வழங்க புதிய சட்டமூலம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
விவாகரத்து வழக்குகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ள புதிய சட்டம் அனுமதிக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) மசோதாவில் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் அறிவிப்புகளை வழங்குவதற்கான விதிகள் அடங்கியிருந்ததாக அமைச்சர் மேலும் கூறினார்.