ஈரானில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க, இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்
சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்தார்.