காசாவில் சுகாதார அவசரநிலை: 14,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: ஐநா அறிவுறுத்தல்

Date:

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காசாவில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இந்நிலையில் காசாவில் சுகாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதேபோல உடனடியாக 14 ஆயிரம் பேர் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது.

அதாவது காசவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலீயோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

காசாவின் குடிநீர் தேவையில் 90% பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே அங்கு மிகமோசமான சுகாதார நிலை நிலவி வருகிறது என ஐநா தெரிவித்திருக்கிறது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...